tag:blogger.com,1999:blog-955779119146668257.post5508783773811909462..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: ஆன்மா எனும் உண்மைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-31074278412511347722012-03-02T18:12:55.416-06:002012-03-02T18:12:55.416-06:00இது அப்பாதுரை எழுதுற சொந்தக் கடோபனிஷது திரு.Expatg...இது அப்பாதுரை எழுதுற சொந்தக் கடோபனிஷது திரு.Expatguru. <br /><br />இருந்தாலும் செய்யுளெல்லாம் சூப்பர். பொறி பறக்கும் எடிடோடிரியல். நசிகேதன் நல்லா வாச்சான் உங்களுக்கு.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-68973632929086172942012-03-02T06:27:51.728-06:002012-03-02T06:27:51.728-06:00புரிகிறது Expatguru. 'சில' என்று சேர்த்துவ...புரிகிறது Expatguru. 'சில' என்று சேர்த்துவிட்டால் போகிறது.<br /><br />மீண்டும் படித்தபோது தான் நெற்றியில் அடித்தது. இதுவரைக் கவனிக்காததற்கு மன்னிக்க வேண்டும். நான் 'காவி' என்று குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட மத இனத்தை என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. இங்கேயும் தாடிகள் உண்டு. தாடி வைத்தக் காவி?<br /><br />இந்த நினைவில் நான் தாடி வளர்க்கத் தொடங்கியிருக்கிறேன் :).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-37204594638236391182012-03-01T03:38:13.566-06:002012-03-01T03:38:13.566-06:00அருமையான விளக்கம், அப்பாதுரை. இதை தான் நான் எதிர்ப...அருமையான விளக்கம், அப்பாதுரை. இதை தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை குற்றம் கூறும் எண்ணம் எனக்கு இல்லை, அந்த தகுதியும் எனக்கு இல்லை. ஒரு அருமையான தொடரை படிக்கும் போது என்னை போன்ற பாமரர்களுக்கு சிறிதளவும் ஐயம் ஏற்பட்டுவிட கூடாது இல்லையா? அதற்காக தான் அப்படி எழுதினேன். உதாரணத்திற்கு இந்த பதிவையே எடுத்து கொள்ளுங்களேன். "...தனக்குச் சொர்க்கம் கிடைக்குமென்று காவிகள் சொன்னக் கட்டுக்கதையை நம்பி...." என்ற வரியில் "சில காவிகள்" என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களது பிரமாதமான விளக்கம் பதிவை விட அழகாக இருந்தது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-28767688614344883882012-02-29T16:20:12.154-06:002012-02-29T16:20:12.154-06:00படித்து மலைத்து விட்டேன். பேரான்மாவின் தன்மையை வ...படித்து மலைத்து விட்டேன். பேரான்மாவின் தன்மையை விளக்கி இருக்கும் விதம் அருமை.<br />சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அழகாய் சொல்லிவிட்டீர்கள். உங்கள் நசிகேத வெண்பாவின் மிக சிறந்த பதிவில் இதுவும் ஒன்று. முன்பு விளக்கமாக எழுதி இருந்ததை இந்த ஒரு பதிவில் இரத்தின சுருக்கமாய் தொகுத்து அழகாய் கொடுத்து விட்டீர்கள். மனம் பக்குவ படவேண்டும். <br /> அதற்காக இதை மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும். <br />//மானிடம் இருவகைப்படும். ஒன்று அறிவுள்ள இனம். மற்றது அறிவற்ற இனம். நம்மில் வேறு பேதமேயில்லை.// மிகவும் சரி.<br />இதை படித்தபின் அவையோர் கேட்பது போல் நானும் கேட்கிறேன் இனி என்ன செய்ய வேண்டும். :) கண்மூடித்தனத்தை விட்டாலே போதும். ஆனால் அது எளிதல்ல இல்லையா. தவறு என்று வருந்தினால் மட்டும் போதாது, திருந்தவும் வேண்டும். <br /><br />பின்னூட்டத்திலும் உங்கள் கருத்து மிகவும் நன்று.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-14193528286244964072012-02-29T08:32:21.376-06:002012-02-29T08:32:21.376-06:00வருக expatguru. கருத்துக்கு நன்றி.
காவிகள் என்று ...வருக expatguru. கருத்துக்கு நன்றி.<br /><br />காவிகள் என்று வரும் இடங்களில் தாடிகள் என்று படித்துக் கொள்ளுங்களேன்?<br /><br />முப்பதாண்டுகளுக்கு முந்தைய அறிமுகம் என்றாலும் கடோவைப் பத்து ஆண்டுகள் போல் தீவிரமாகப் படித்து வருகிறேன். இன்னும் புரியவில்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு வருடமும் படிக்கும் பொழுது புதிதாக ஏதாவது பொருளோ ஐயமோ தோன்றுகிறது. எனக்குப் புரிந்ததாகப் பட்டதை என் நம்பிக்கைகளின் extrapolationஆக இதை எழுதிவருகிறேன். அவ்வளவுதான். இதில் யாரைச் சாடி என்ன பயன்? பற்றறுப்பை ஒருதலையாகப் பேசும் பொய்யர்களை நான் சாடி என்ன பயன்? காவி என்றாலோ தாடி என்றாலோ பேதஜோதியில் கலந்து நானும் பொய்யனாவேனே? சாடுவதையே விட்டொழிக்கத்தான் இதை எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் :) <br /> <br />காவி தாவி மோடி தாடி அங்கி லுங்கி.. எல்லாமே புற அடையாளங்கள். அக அடையாளம் பற்றியல்லவா இரண்டு வருடங்களாக சொல்லி வருகிறேன்? (என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் :). நசிகேதன் கதை அகத்தைக் காணும் ஒரு பயணம். அகத்தில் காவி தாடி இல்லை.. அல்லது எல்லாமே ஒன்று தான். அகத்திலும் பேதம் பார்ப்பது அறியாமை என்று நம்புகிறேன். <br /><br />எல்லோரும் பிறப்பால் ஓரினமே. இறப்பால் ஈரினம் எனலாம்: அறிவுள்ள இனம், அறிவற்ற இனம். <br /><br />இறக்கும் பொழுது (தன்னை) அறிந்தவராக இறக்கிறோமா, அறியாதவராக இறக்கிறோமா? அது தான் கேள்வி. <br /><br />மனிதத்தை அறியவொட்டாமல் இருப்பதும் தடுப்பதும் அறிவற்றவர் வேலை. இதில் தாடி என்ன காவி என்ன? தன்னை நம்பினாலும் சரி, காவியை.. க்குக்கும் தாடியை.. நம்பினாலும் சரி, இந்தக் கேள்வியைப் புறக்கணிக்கும் அத்தனை பேரிலும் தாடி காவி அங்கி லுங்கி இன்னபிற உண்டு என்று நினைக்கிறேன்.<br /><br />காவிகளைச் சாடவில்லை. எவரையும் சாடவில்லை. எவரையும் சாடும் தகுதி எனக்குச் சிறிதும் இல்லை. சாடும் எண்ணமிருந்தால் காவிகளின் பேச்சைக் கேட்டு கண்மூடும் என் போன்ற அறிவற்றக் கூட்டத்தைச் சாடுவேன். அதற்கும் எனக்குத் தகுதியில்லாததால் கருத்தை முன்வைப்பதோடு சரி. <br /><br />காவிகளைக் கெட்டவர்கள் என்று judgmentalஆக எங்கே குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள், திருத்திவிடுகிறேன். படிக்கும் பொழுது காவிகளோ தாடிகளோ கெட்டவர்கள் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் உருவானால் அது ஒரு வகை வெற்றி என்று தோன்றுகிறது. கவனமாக இருக்க வேண்டும் :)<br /><br />நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை, ஒரே ஒரு வாய்ப்பை - 'ஒரே ஒரு வாய்ப்பு' என்பதில் மறைந்திருக்கும் மகத்துவம், my goodness, கோடியில் ஒருவருக்குக் கூடப் புரியாமல் போவது எத்தனை கொடுமை என்று நினைத்துப் பார்த்தால் இதன் தாக்கம் புரியும் - அப்படிப்பட்ட ஒரே ஒரு வாய்ப்பை மறந்து வாழ்நாள் முழுதும் அறியாமையில் மூழ்கியிருப்பது வறுமையிலும் பிணியிலும் கொடுமை இல்லையா? அப்படி மூழ்கியிருப்போரை மூழ்கியே இருக்க வைப்பது இன்னும் கொடுமையில்லையா? அப்படிச் செய்வோர் காவிகளாயிருந்தாலென்ன தாடிகளாயிருந்தாலென்ன நானாகவிருந்தாலென்ன நீங்களாகவிருந்தாலென்ன?<br /><br />கடோவில் இந்தக் கருத்துக்கள் உள்ளதா இல்லையா என்பதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும் :) if it matters, தமிழில் எழுதியுள்ள செய்யுட்களுக்கு கடோவில் வேர் உண்டு. ஒரு சொல் விடாமல், அத்தனை விளக்கங்களுக்கும் விளக்கம் தொட்ட உரையாடல்களுக்கும் நானே பொறுப்பு. கடோவில் செங்கல் அடுக்கிய ஹோமகுண்டம் அக்னிஹோத்திரம் யாகம் பிராமணம் விராட் புருஷம் என்று வருகிறது. நான் நற்குணங்களை செங்கல் என்கிறேன். உளத்தூய்மையை வேள்வி என்கிறேன். புருஷமாவது பிராமணமாவது என்கிறேன். மற்றபடி கடோவின் சாரத்தை தமிழில் கொடுத்திருக்கிறேன். இதுபற்றிய என் கருத்துக்களை முன்னுரையிலும் இடையுரையிலும் நிறைய எழுதியிருக்கிறேன். பின்னுரைக்கும் மிச்சம் வைத்திருக்கிறேன் :)<br /><br />எமன் யார், எமனுக்கு ஆசான் யார் என்பதற்கு எனக்குப் பதில் தெரியாது. கடோ வசதியாக எமனைக் கடவுள் என்கிறது. மூச் பேச் கூடாத். <br />எனினும், எமன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு மூன்றாம் பகுதியில் (இரண்டாம் பகுதியோ?) பதிலிருப்பதாக நினைக்கிறேன். எமனும் பேரலையின் அம்சம் என்பதே. இங்கே நசிகேதன் எனும் ஒரு விடாமுயற்சிச் சிற்றலையைத் தன்னுள் சேர்த்தப் பேரலை.<br /><br />தொடர்ந்து படிப்பதற்கும் சிந்தனைகளைக் கிண்டுவதற்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-22303572420935892552012-02-29T02:47:36.269-06:002012-02-29T02:47:36.269-06:00வழக்கம் போல காவிகளை சாடியிருக்கிறீர்கள். உண்மையிலே...வழக்கம் போல காவிகளை சாடியிருக்கிறீர்கள். உண்மையிலேயே கடோவில் இப்படி உள்ளதா அல்லது இது உங்களுடைய கருத்தா என்று தெரியவில்லை! காவிகளில் நல்லவர்களும் உள்ளார்கள் ஐயா! இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது தான் நிதர்சனம். தாடிகளின் அட்டூழியம் நீங்கள் இருக்கும் இடத்தில் தெரிய வாய்ப்பு இல்லை தான். நேரில் அனுபவப்பட்டதனால் கூறுகிறேன். அதனால் தானோ கெட்டவர்கள் அனைவருமே காவிகள் என்று பொருள்பட கூறுகிறீர்களோ! Everyone is entitled to an opinion and I respect your right to have yours.<br /><br />ரொம்ப நாட்களாகவே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆன்மா, பேரான்மா என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். இதில் எமன் என்பவன் யார்? எமன் ஆன்மாவா, பேரான்மாவா? அல்லது எமனுக்கு ஆன்மாவே கிடையாதா? எமன் ஆசான் என்றால் எமனுக்கு ஆசான் யார்? <br /><br />வெண்பாவில் வார்த்தை பிரயோகம் அற்புதமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-36715320976755115602012-02-28T20:39:47.965-06:002012-02-28T20:39:47.965-06:00நன்றி இராஜராஜேஸ்வரி, Ramani,...நன்றி இராஜராஜேஸ்வரி, Ramani,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-41451661000246111052012-02-27T21:08:36.431-06:002012-02-27T21:08:36.431-06:00உங்கள் மூலம் நசிகேசன் சிறப்பாகவே பேசுகிறான்
தொடர்ந...உங்கள் மூலம் நசிகேசன் சிறப்பாகவே பேசுகிறான்<br />தொடர்ந்து பேச அனுமதிக்கவும்<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வேண்டுகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-31503564622563134482012-02-27T02:20:55.002-06:002012-02-27T02:20:55.002-06:00முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பய...முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பயிரின் கடமை. விதையின் உரிமை பயிருக்கு இல்லை. அதுபோல் நல்முறையில் வளர்ந்து, மனித நேயத்தில் செழித்து, தன்னையறிந்து நடப்பதே நமது கடமையாகும். <br /><br />சிறப்பான சிந்திக்கத் தக்க வரிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-63000019670327177152012-02-27T00:50:43.870-06:002012-02-27T00:50:43.870-06:00இந்த பாடலில் மட்டும் முதிர்ந்த எழுத்தின் நடைத்தெரி...இந்த பாடலில் மட்டும் முதிர்ந்த எழுத்தின் நடைத்தெரியவில்லை. சிறிய படபடப்புத் தெரிகிறது. "நான்கு வரிப்பாடலுக்கு இவ்வலவுப்பெரிய பொருளா?" ஒரு வார்த்தையைக் கொடுத்து வாக்கியத்திலமைத்துச் செல்வதுப் போல வ் ஆ நசி புத்திரா என்று மனம் கேட்பதுப்போலுல்லது.<br /><br />கூட்டத்தின் புலுக்கத்தில் பயம் பொரித்தட்டியிருக்குமோ சந்துரு சார்.Anonymousnoreply@blogger.com