tag:blogger.com,1999:blog-955779119146668257.post5074054664853552932..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: ஆன்மா சேருமிடம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-48108953250357895542012-03-19T16:49:32.272-05:002012-03-19T16:49:32.272-05:00நன்றி meenakshi, சிவகுமாரன், ...
'ஒளி' பற...நன்றி meenakshi, சிவகுமாரன், ...<br /><br />'ஒளி' பற்றிய குறிப்பு கேனோபஷிதில் வருகிறது சிவகுமாரன். அதை லேசாகத் திரித்து இங்கே பயன்படுத்தியிருக்கிறேன். ஆழமோ அழகோ வெளிப்பட்டால் அந்தப் பெருமை கேனோபனிஷது எழுதியவர்களுக்குச் சொந்தம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-40147229052227420202012-03-19T09:29:28.919-05:002012-03-19T09:29:28.919-05:00ஒளி-பொருள் , ஆன்மா - குணம் அருமையான உவமை. சிந்திக...ஒளி-பொருள் , ஆன்மா - குணம் அருமையான உவமை. சிந்திக்க வைத்த விளக்கம்.<br /><br />\\ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்றுவோம்"// <br /> அருமைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-68675441798847416042012-03-19T09:24:33.137-05:002012-03-19T09:24:33.137-05:00படிக்க படிக்க சுவையான வெண்பா.
புதிய ( பழைய ??) சொ...படிக்க படிக்க சுவையான வெண்பா. <br />புதிய ( பழைய ??) சொற்கள். பொறாமையாக இருக்கிறது அப்பாஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-34823709261774140882012-03-17T22:15:58.142-05:002012-03-17T22:15:58.142-05:00வெண்பா படிக்க அழகாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு மு...வெண்பா படிக்க அழகாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு முறை சொல்லி பார்த்தேன். தமிழ் இனிமைதான்.<br /><br />//ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணத்தில் இளப்பாறத் தங்கும் நிழல் போன்றது பிறப்பு. // மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். <br />இளைப்பாறும் இடத்தில் நிம்மதியாக இளைப்பாற முடிகிறதா?!<br /><br /><br />தீயையும், நீரையும் வைத்து விளக்கி இருப்பது பிரமாதம். இருமைகள் எல்லாம் ஒருமையின் வெளிப்பாடு. உண்மை. எதற்கும் கலங்காமல் எல்லாவற்றையுமே ஒரே மன நிலையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் வந்தால் மனதில் என்றுமே அமைதிதான். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க இயலாது என்பது போல் கலங்கிய மனதில் தெளிவு பிறக்காது. அமைதியே தன்னறிவு பெறுவதற்கு முதல் படி என்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். அருமையான விளக்கம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-20937409439399885032012-03-17T09:18:41.366-05:002012-03-17T09:18:41.366-05:00சரியான கேள்வி Expatguru!
கடோவைப் படிக்கும் ஒவ்வொர...சரியான கேள்வி Expatguru!<br /><br />கடோவைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். 'கடவுள் யார்' என்ற கேள்விக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இன்னொரு முறை படித்தால் வேறு கேள்வி எழலாம். நானும் உங்களைப் போல் தான். இந்தப் புத்தகத்தைப் பலமுறை படித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகளில் நிலையானது 'நான் யார்' என்பதே. அந்தக் கேள்விக்குப் பிறகே இதை எழுதத் தொடங்கினேன்.<br /><br />கடவுள் யார் என்று தெரிந்து என்ன பயன்? கடவுள் எல்லாம் வல்ல சக்தி என்பது தெரிந்தால் 'ஹ்ம்ம் ஏற்கனவே தெரிந்தது தானே' என்ற சிறு ஏமாற்றம். கடவுள் ஒரு நனைந்தப் பட்டாசு என்று தெரிந்தாலும் அதே நிலை. எப்படியிருந்தாலும் சிலருக்குப் பெருத்த ஏமாற்றம். ஆனால் நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் அது நமக்கு எப்போதுமில்லாத சமநிலைக் கண்ணோட்டத்தையும் அமைதியையும் வழங்கும் - நிச்சயம். நான் யாரெனத் தெரியாமல் வாழ்ந்தேன், இனி வாழேன் என்ற குறிக்கோள் தொட்ட வேகத்தைக் கொடுக்கும் - நிச்சயம். கடோ எழுதியவர்களின் நோக்கமும் அதுவாகவே இருந்திருக்கும் என எண்ணுகிறேன். தன்னையறிந்து கொள்ளும் தேடலில் இறங்கவே இதை எழுதினார்கள் என்று நம்புகிறேன். இதைப் படிப்பவர்கள் பலரும் பலதரக் கேள்விகளுக்குப் பின்னர், 'தான் யார்' என்ற கேள்வியை கேட்பார்கள் என்று எண்ணுகிறேன்.<br /><br />எமன் 'கடைசியில்' 'அனைவரும்' தன்னிடம் வருவதாகச் சொல்லவில்லை - மீண்டும் படித்துப் பாருங்களேன்?<br /><br />எமன் யார்? நசிகேதன் யார்? போன்ற கேள்விகளுக்குச் சரியான விடை கிடையாது. கதை சொல்லும் பாணிகளில் இது ஒன்று. இதைத் தத்துவக் கண்ணோட்டத்துடன்.. even logical கண்ணோட்டத்துடன்... பார்த்தாலும் எமன் யார் என்பதற்கான ஒரு விடையைப் பின்னுரையில் எழுத எண்ணியிருக்கிறேன். (அவசரமென்றால் பதில் சில பாடல்களிலும் பின்னூட்டங்களிலும் புதைந்திருக்கிறது :)<br /><br />உங்கள் கேள்வியிலேயே ஒரு விடை புதைந்திருப்பதை இப்போது தான் கவனித்தேன்: "எல்லாமே அணுவாக கலந்தால் எமனும் எம தூதர்கள் என்றும் யாருமே கிடையாதே!"<br />ஒருமையில் கவனியுங்கள் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-9481906311839511222012-03-17T08:44:12.607-05:002012-03-17T08:44:12.607-05:00வருக பரமசிவம். இந்தப் பதிவின் நோக்கம் ஒரு அருமையா...வருக பரமசிவம். இந்தப் பதிவின் நோக்கம் ஒரு அருமையான வடமொழி நூலைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே. ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் பற்றிய என் கருத்துக்கள் மாறுபட்டாலும் அவற்றை தலையங்கமாக (முதல் மூன்று பகுதிகளில்) அன்றிப் பாடலிலோ பொருளிலோ சேர்க்க மனம் வரவில்லை. மூல நூலின் மதிப்பை என் சொந்த விருப்பு வெறுப்புகளால் பாதிக்க விரும்பவில்லை. தமிழில் தரும் பொழுது மத/இன/தெய்வ/சடங்குக் குறிப்புகளை நீக்க மட்டும் உரிமையெடுத்துக் கொண்டேன் :) இது நசிகேதன் கதை. அப்படியே இருக்கட்டுமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-63596441648410143972012-03-17T08:18:17.437-05:002012-03-17T08:18:17.437-05:00பிறப்பு இறப்பு பற்றிய விளக்கம் அருமை. இதையே வினாயக...பிறப்பு இறப்பு பற்றிய விளக்கம் அருமை. இதையே வினாயகர் அகவலில் ஒளவையார் "அணுவிற்கு அணுவாக அப்பாலுக்கு அப்பாலாய்" என்று கூறியிருக்கிறார். முன்பு ஒரு பதிவில் எமனின் தூதர்கள் நசிகேதனை அழைத்து கொண்டு செல்வதாக கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய வெண்பாவில் பல இடங்களில் எமனே கடைசியில் அனைவரும் தன்னிடம் வருவதாக கூறியுள்ளான். <br /><br />இப்போது இந்த விளக்கத்தையும் பார்த்தால் சற்றே முரண்பாடாக தெரிகிறதே. எல்லாமே அணுவாக கலந்தால் எமனும் எம தூதர்கள் என்றும் யாருமே கிடையாதே! முன்பு ஒரு பின்னூட்டத்தில் எமனை கடவுள் என்று கடோவில் கூறி இருப்பதாக சொன்னீர்கள். கடைசியில் யோசித்து பார்த்தால், 'கடவுள் யார்' என்ற கேள்விக்கே வருகிறோம் என்று எனது சிற்றறிவிற்கு தோன்றுகிறது. பேரான்மா தான் கடவுளா? கடோவில் இதை பற்றி ஏதாவது உள்ளதா?Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-44855363393083053822012-03-17T01:07:15.931-05:002012-03-17T01:07:15.931-05:00நசிகேதன் சொன்னது சரி. ஆன்மா, மறுபிறப்பு பற்றியெல்ல...நசிகேதன் சொன்னது சரி. ஆன்மா, மறுபிறப்பு பற்றியெல்லாம் தங்களின் கருத்துகளையும் வெளியிட்டிருக்கலாமே?'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.com