tag:blogger.com,1999:blog-955779119146668257.post3513264799553589383..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: அறிவே தேவை என்றான் நசிகேதன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-48701468631308838392011-04-17T12:34:36.279-05:002011-04-17T12:34:36.279-05:00பிரிய ஆர்.வீ.எஸ் ! நான் கொஞ்சம் கலாய்த்தேன்.. உமக்...பிரிய ஆர்.வீ.எஸ் ! நான் கொஞ்சம் கலாய்த்தேன்.. உமக்கு அழகே அந்த கொனஷ்டை தான் மைத்துனரே! அதை விட்டுட்டு அலையாதேயும்.. அப்புறம் சீனியர் சிடிசன்னு பாஸ் கொடுத்திடுவாங்க! இன்றுபோல் என்றும் வாழ்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-19674251380167806042011-04-17T09:23:05.347-05:002011-04-17T09:23:05.347-05:00@மோகன்ஜி
அண்ணா ரொம்ப சாரி! கொனைஷ்டை இல்லாம இருக்...@மோகன்ஜி <br />அண்ணா ரொம்ப சாரி! கொனைஷ்டை இல்லாம இருக்க முடியலை... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-6018145594597166542011-04-12T06:59:52.933-05:002011-04-12T06:59:52.933-05:00ஆகா! மண்டையில ஒண்ணு போட்டீங்க!
>>>அவமானம...ஆகா! மண்டையில ஒண்ணு போட்டீங்க! <br />>>>அவமானம் என்பது தன்மேல் கொண்ட கோபம் அல்லவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-76631613360662157112011-04-12T06:55:55.179-05:002011-04-12T06:55:55.179-05:00///அவமானமாக இருக்கிறது இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள...///அவமானமாக இருக்கிறது இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள, இருந்தாலும் பொதுவில் இறக்கி வைத்து கொஞ்சம் சுமை குறைந்தது போல் பாவனை செய்கிறேன்.//<br /><br />அவமானம் என்பது தன்மேல் கொண்ட கோபம் அல்லவா? அதையும் விலக்கி விட்டால்.......<br />--Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-5404921619044532382011-04-11T20:15:14.230-05:002011-04-11T20:15:14.230-05:00வருக geetha santhanam
பெண்பாவா? ஆகா RVS! (எவனோ து...வருக geetha santhanam<br /><br />பெண்பாவா? ஆகா RVS! (எவனோ துரத்துறா மாதிரியே இருக்கே.. நான் புலவன் இல்லே.. இல்லை.. நீங்கள் புலவர்.. நீங்கள் தான் புலவர். நான்.. நான்.. நான் புலவன் இல்லை..)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-39980766129111536162011-04-11T13:23:29.328-05:002011-04-11T13:23:29.328-05:00கீதா மேடம் கருத்து சிந்திக்கத் தக்கது.
'சுமதி...கீதா மேடம் கருத்து சிந்திக்கத் தக்கது.<br /><br />'சுமதி என்றும் சுந்தரி' என்கிற தலைப்புல அந்த சதகத்தை தமிழில் இன்று தான் எழுத ஆரம்பித்தேன். அதுக்குள்ள சிவாவும் ஆர்.வீ.எஸ்ஸும் என் சுந்தரி உன் சுந்தரின்னு சொந்தம் கொண்டாடறது நல்லாவா இருக்கு?<br />/வெண்பா படிக்கிற இடத்துல பெண்பா படிக்கக்கூடாது../ன்னு நடுவுல அப்பாவி அறிக்கை வேற! என்னவோ போங்க.. எனக்கு கோவம் கோவமா வருது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-47507769842164261932011-04-11T05:40:01.236-05:002011-04-11T05:40:01.236-05:00"சுமதி என் சுந்தரி" அப்படின்னு அப்பாஜி ச..."சுமதி என் சுந்தரி" அப்படின்னு அப்பாஜி சொல்லலையே மோகன் அண்ணா! ;-)))<br /><br />மோகன் அண்ணா மஹாபாரதக் கதை அற்புதம். <br /><br />சிவா ..,... ரொம்ப தப்பு.. எந்த சுமதியா இருந்தா என்னான்னு கேக்கறீங்களே அப்பறமா சுமதி எப்படி இருந்தா என்னான்னு கேட்டுடப் போறீங்க..<br />ச்சே..ச்சே.. ரூட்ட மாத்து... வெண்பா படிக்கிற இடத்துல பெண்பா படிக்கக்கூடாது... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-69633948334421310202011-04-11T01:13:23.141-05:002011-04-11T01:13:23.141-05:00கோவம் பற்றிய விளக்கம் அருமை. கோவம் இயலாமையைக் காட்...கோவம் பற்றிய விளக்கம் அருமை. கோவம் இயலாமையைக் காட்டும்- கோவம் கொள்பவர் அல்லது கோவத்தை எதிர்கொள்பவர் இருவரின் இயலாமையும். பெரும்பாலும் இரண்டாமவரின் இயலாமையே கோவம் கொள்பவருக்குச் சாதகமாகிறது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90288270526151201342011-04-10T15:09:11.064-05:002011-04-10T15:09:11.064-05:00எந்த நூற்றாண்டா இருந்தா என்ன மோகன் அண்ணா ?எந்த நூற்றாண்டா இருந்தா என்ன மோகன் அண்ணா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-51951948228259986802011-04-10T13:37:18.322-05:002011-04-10T13:37:18.322-05:00சுமதியை மறக்கக் கூடாதா! நன்னா சொன்னேள் போங்கோ. அவள...சுமதியை மறக்கக் கூடாதா! நன்னா சொன்னேள் போங்கோ. அவள் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு சுமதியாக்கும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-69357591649142106722011-04-10T12:10:13.543-05:002011-04-10T12:10:13.543-05:00கதையும் நீதியும் வெகு பொருத்தம் மோகன்ஜி. கோபம் பாழ...கதையும் நீதியும் வெகு பொருத்தம் மோகன்ஜி. கோபம் பாழ் - இதை மறக்கவே கூடாது. சுமதியையும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-65957749382496465302011-04-10T05:26:23.067-05:002011-04-10T05:26:23.067-05:00மகாபாரதத்தில் தர்மனுக்கு பீஷ்மர் சொன்ன கதை ஒன்றுண்...மகாபாரதத்தில் தர்மனுக்கு பீஷ்மர் சொன்ன கதை ஒன்றுண்டு.<br />மேதாதிதி எனும் ஒரு முனிவர் இருந்தார்.அனைத்தும் கற்றவர் கோபம் மட்டும் அடக்க கற்றாரில்லை. பெரும் முன்கோபி. அவருக்கு நேரெதிரான குணங்களுடன் அவர் மகன் திகழ்ந்தான்.அனைத்து சாத்திரங்களையும், புலனடக்கத்தையும் இளமையிலேயே கற்று.. நிதானத்தைக் கடைபிடிப்பவனாய் இருந்ததினால் அவனை அனைவரும் ‘சிரகாரி’ என்றழைத்தனர்.<br /><br />ஒரு நாள் முனிவர் ஏதோ காரணத்தால் தன் மனைவி மீது மிகுந்த சினம் கொண்டார். பிள்ளையை அழைத்து, தான் திரும்பும் முன் அவளைக் கொன்றுவிடக் கட்டளை இட்டு, தர்ப்பைப்புல் அறுக்க காட்டுக்குள் சென்று விட்டார்.<br /><br />பிள்ளை யோசனையில் ஆழ்ந்தான். கடவுளையும் விட மேலான தாயைக் கொல்வதா? கொல்லவில்லை என்றாலோ தந்தையும் குருவுமான முனிவரின் கட்டளையை மீறியது ஆகும். தந்தை இட்ட கட்டளை கோபத்தினால் ஆதலால் கோபம் தணிந்தபின் அவர் மனம் மாறலாம். தாயைக் கொன்றுவிட்டாலோ அவர் மனம் மாறியும் பயனிருக்காது. கொல்லாமல் விட்டுவிட்டால் முனிவரின் சாபம் மட்டுமே எஞ்சும். அதுவும் தன்னை மட்டுமே பாதிக்கும். தாய் வாழ சந்தர்பம் இருக்கும். எனவே கொல்வதில்லை எனத் துணிந்தான். <br /><br />காட்டுக்கு சென்ற முனிவரின் சினம் மெல்லத்தணிந்தது. தன் கட்டளையின் விளைவை எண்ணிக் கலக்கமுற்றார். தன் மகன் அதை நிறைவேற்றியிருக்கக் கூடாதே என வேண்டியபடியே பர்ணசாலைக்கு ஓடி வந்தார்.<br /><br />வாசலில் நின்றிருந்த மகன் முனிவரைப் பார்த்ததும் கையிலிருந்த வாளைக் கீழே எறிந்து விட்டு அவர் காலில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினான். ரத்தமில்லா வாளைக் கண்டு சமாதானமானார். இனி என்றும் கோபிப்பதில்லை என உறுதிபூண்டார்.<br /><br />கோபம் தன்னிலை மறக்கச் செய்யும். நன்மைக்கும் தீமைக்கும், நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் உள்ள வித்தியாசம் புலப்படாது. காலமெல்லாம் வருத்தம் தரக் கூடிய நிலையைத் தோற்றுவிக்கும்.<br /><br />பிறர் கோபம் காட்டும் போதும், தான் கோபம் கொள்ளாதவன் பாக்கியவான்.<br /><br />சுமதி சதகம் எனும் நீதி நூலொன்று தெலுங்கில் உண்டு.<br /><br />பர நாரி சோதுருடை<br />பர தனமுலகு ஆச படக,<br />பரலகு ஹிதுடை,<br />பரலு தனு போகட நெகுடக<br />பரு லலிகின நாலுக நடடு பரமுடு சுமதி!<br /><br />என்ன நாக்கு சுளிக்கிடிச்சா? அர்த்தம் இதோ.<br /><br />பிற பெண்களை சகோதரிகளாய் நினைப்பவன் ;<br />பிறர் செல்வத்தை விரும்பாதவன் ;<br />பிறர் நலம் விழைபவன் ;<br />பிறர் புகழ்ச்சியில் மயங்காதவன் ;<br />பிறர் கோபிக்கும் போதும் அமைதி காப்பவன் எவனோ <br />அவனே மேம்பட்டவன் என அறிவாய் சுமதி! <br /><br />ஆகவே மகாஜனங்களே! கோச்சுக்காதீங்க..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67212952655941481592011-04-09T20:01:39.336-05:002011-04-09T20:01:39.336-05:00பாரதி சொன்னால் என்ன சிவகுமாரன்? கோபம் கோழைத்தனம் எ...பாரதி சொன்னால் என்ன சிவகுமாரன்? கோபம் கோழைத்தனம் என்றே நினைக்கிறேன். வடமொழியில் ரௌத்ரம் என்பது அநீதி கண்டு எழும் அழிவு எழுச்சி - தமிழில் என் எண்ணத்தைச் சரியாகச் சொல்ல வரவில்லை. ரௌத்ரம் என்பதற்குக் கோபம் சரியான தமிழ்ச்சொல்லா தெரியவில்லை - கோபம் என்றே பொருள் சொல்லி வருகிறோம். சினத்துக்கும் எழுச்சிக்கும் வேறுபாடு உண்டே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23563545494175569122011-04-09T19:59:03.215-05:002011-04-09T19:59:03.215-05:00நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது சிவகுமாரன். என்...நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது சிவகுமாரன். என் நண்பர் கோபமாக எதுவுமே பேசமாட்டார்.. கூட்டத்தில் நாங்கள் சிலசமயம் இலக்கை மறந்து கூச்சல் போடுவோம்; அதுவும் தொழிற்சங்கத் தொடர்பான கூட்டமென்றால் நிச்சயம் கோபதாபம் இருக்கும். நண்பரின் நடத்தை அவரின் கோபத்தை மறைமுகமாகக் காட்டினாலும் எங்கள் இலக்கை மறவாமல் இருக்க உதவியது. முதலில் அவருடைய நடத்தை விசித்திரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. பழகியது, அவர் செருப்பைக் கழற்றப் போகிறாரே என்று அடிக்கொரு தரம் அவரைக் கவனிக்கத் தொடங்கினோம் (அதுவும் எங்கள் இலக்கை மறைத்தது என்று பின்னாளில் அவரிடம் சொன்னேன்).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72207458724866063632011-04-09T14:46:03.965-05:002011-04-09T14:46:03.965-05:00உங்கள் மேலாளரின் உத்தி அவரின் கோபத்தைத் தான் காட்ட...உங்கள் மேலாளரின் உத்தி அவரின் கோபத்தைத் தான் காட்டுகிறது. எதிரில் இருப்பவர்களை அவமானப்படுத்தும் செயல் அது என்பது என் எண்ணம்,<br />தாமஸ் ஜாபர்சனின் கருத்து நிறையவே யோசிக்க வைக்கிறது. நல்ல உத்தி அது.<br /><br />எல்லாக் கோபமும் கோழைத்தனம் அல்ல. ரௌத்திரம் பழகச் சொன்னானே பாரதி ஏன் ?<br /><br />எனது இந்தக் கவிதையை படித்திருக்கிறீர்களா ?<br />http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/ada-aamaam.htmlசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-59183100374166516602011-04-09T06:49:31.697-05:002011-04-09T06:49:31.697-05:00வருக meenakshi, பத்மநாபன், RVS,...
'கோபத்தின்...வருக meenakshi, பத்மநாபன், RVS,...<br /><br />'கோபத்தின் பின்னே குணம் கிடையாது' என்றே நினைக்கிறேன் பத்மநாபன். <br /><br />குணம் இருந்தால் கோபம் வரவேண்டிய அவசியமே இல்லை. பிள்ளைகளைத் 'திருத்துவது' என்ற நினைப்பிலேயே 'குணம்' இல்லையே? கொலை, திருட்டு, பொய், தீவிர ஏமாற்று போன்ற செயல்களைத் தவிர்த்து, பிற செயல்களைத் 'திருத்த' கோபம் தேவையா? பிள்ளைகள் அத்தகையப் பாதகச் செயல்களில் இறங்கினால் கூட, திருத்தக் கோபம் கொண்டும் பயனில்லை. இங்கே கோபம் திருத்துவதற்குப் பயன்படுத்தபடும் உபாயம் அல்ல. தன்னுடைய கௌரவம் போனதே என்ற அவமானத்தை மூடப்பார்க்கும் சாதனம் என்று புரிவதற்கு முன்பே கோபம் கொண்டு விடுகிறோம். மற்றபடி சாப்பிடவில்லை, படிக்கவில்லை, தூங்கவில்லை, எதிர்த்து பேசுகிறாள், சண்டை போடுகிறான், சொன்ன பேச்சு கேட்கவில்லை, பெரியவர்களை மதிக்கவில்லை... போன்ற சில்லறை நடத்தைகளுக்குக் கோபம் கொள்வது (இவையே பெரும்பாலும் பெற்றோர்களின் கோபத்தைத் தூண்டுகின்றன)... இவையெல்லாம் சற்று யோசித்துப் பார்த்தால் 'பெற்றோரின் பிடி விலகல்' என்பது புரியும். பிள்ளைகளின் 'வளர்ச்சி' என்பது புரியும். அதற்காகக் கோபப்பட்டு இருக்கும் குணத்தையும் இழக்கிறோம். (குணம் இருந்தால் :)<br /><br />கோபத்தை நியாயப்படுத்துவது போலித்தனம் என்று நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறேன்: என் தந்தையின் கோபத்தால் பாதிக்கப்பட்டதையும், என்னுடைய கோபத்தால் உறவிலும் நட்பிலும் பலர் பாதிக்கப்பட்டதையும் வைத்துப் பார்க்கும் போது - கோபம் தான் நினைவில் நிற்கிறது. பிறருடைய கோபத்தாலும் என்னுடைய கோபத்தாலும் நான் இழந்தவற்றுக்குக் கணக்கே இல்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் கோபத்துக்கு பலியான சிலர் இன்றும் என்னைக் கண்டு நடுங்கும் பொழுது அவமானத்தால் குன்றிப் போகிறேன். கோபத்தின் பின்னே குணம் கொஞ்சம் கூடக் கிடையாது என்பது என் அபிப்பிராயம். கோபம் சண்டாளம் என்பது மிகச்சரி RVS. சண்டாளம் என்பதன் பொருள் புரிந்த நாளில் கோபம் ரத்தத்துடன் கலந்து விட்டதே! <br /><br />அறிவுரை வழங்க எனக்கு அருகதை இல்லை, இருந்தாலும் கோபத்தைக் காட்டுவதும், கோபத்துக்கு அடங்குவதும்.. இரண்டுமே மிக மிகத் தாழ்ந்த நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல வல்லவை என்பதை உணரவேண்டும். நடந்ததை மாற்ற முடியாது; இனியாவது கோபத்தை அறவே ஒழிக்க முயல்வது நல்லது என்று நம்புகிறேன். "நான் கோபப்படும்படி நடந்து கொள்ளாதீர்கள்" என்று முன்பெல்லாம் சொல்வேன் - அதன் அசிங்கமும் முட்டாள்தனமும் புரிந்த போது மிக அருவருப்பாக உணர்ந்தேன். "என் கோபத்தைக் கண்டு பயப்படாதீர்கள்" என்று என் பிள்ளைகளுக்குச் சொல்லும் அளவுக்குக் கேவலமாக இருந்த நாட்களும் உண்டு.<br /><br />என் நெருங்கிய உறவினர் ஒருவர் சொல்வார்: "கோபம் கொள்வதில் தவறே இல்லை துரை; எல்லோருக்கும் கோபம் கொள்ள உரிமை உண்டு. அதை வெளிப்படுத்து தான் தவறு; அதுவும் பிறர் மேல் வெளிப்படுத்த உரிமையே இல்லை". (மனிதருக்கு கோபமே வருவதில்லை என்று நினைத்தோம் நாங்களெல்லாம்; சூடு சுரணை கிடையாதா என்று கிண்டல் செய்வேன் முன்பெல்லாம், இப்போது கோபமின்மை அவருடைய வரம் என்று நினைத்து நெகிழ்ந்து போகிறேன்).<br /><br />அவமானமாக இருக்கிறது இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள, இருந்தாலும் பொதுவில் இறக்கி வைத்து கொஞ்சம் சுமை குறைந்தது போல் பாவனை செய்கிறேன்.<br /><br />கருத்துக்களுக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-45969873714310791372011-04-09T00:31:31.115-05:002011-04-09T00:31:31.115-05:00Anger is Debatable என்று ஒரு வாசகம் உண்டு. பெரிய ம...Anger is Debatable என்று ஒரு வாசகம் உண்டு. பெரிய முன்கோபி என்று சொல்லிக்கொள்பவன் கூட காரியம் ஆக வேண்டும் என்றால் அனைத்தையும் பொத்திக்கொண்டு இருப்பான். கோபம் பாபம் சண்டாளம் என்று என் பாட்டி சொல்லுவாள். விஸ்வாமித்திரன், துர்வாசர் போன்ற நிறைய உதாரணங்கள் புராணங்களில் இருக்கிறது.<br /><br />உயிரின் உறைவிடம். அற்புதமான சொல்லாடல் அப்பாஜி! துயிலரசன் என்ன சொல்லப் போகிறான்....RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-28631019228172884672011-04-08T23:24:04.129-05:002011-04-08T23:24:04.129-05:00கோபத்திற்கான காரணத்தைக் கொண்டு குணமா கோழைத் தன...கோபத்திற்கான காரணத்தைக் கொண்டு குணமா கோழைத் தனமா என முடிவு கொள்ளலாம் .... பிள்ளைகள் திருத்துவதாக நினைத்து அன்புக்கு மாற்றாக கோபத்தை பயன் படுத்துவது குணம் .இங்கு பொறுமையை கையாள கையாள சினம் தீர வாய்ப்பு அதிகம் .. இயலாமையால் எதிரிகள் மிது செலுத்தும் கோபம் கோழைத்தனம் ..இங்கு வரும் கோபம் அழுத்தம் கூட்டி பல பக்க விளைவுகளை தருகிறது . உங்கள் மேலாளர் பயன் படுத்திய முறை வித்தியாசமாக இருந்தாலும் உடனடி பயனளிக்கவல்லது.. <br />துயிலரசன் எம தர்மராசனுக்கு , நசிகேதனுக்கு உயிர் ஞானம் தருவதை தவிர வேறு வழி இல்லை .. இங்கு நசிகேதனின் விடா முயற்சி பாராட்டுக்குரியது .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-18662735540554722092011-04-08T22:46:35.957-05:002011-04-08T22:46:35.957-05:00'நச்சம் நராந்தக நூற்கு' படிக்க இனிமையாய் ...'நச்சம் நராந்தக நூற்கு' படிக்க இனிமையாய் இருக்கிறது. <br />'உயிருக்கு எது உறைவிடம்?' அருமையான கேள்வி. உயிருக்கு உடல்தான் உறைவிடமா? உடல் மட்டும்தான் உறைவிடமா?<br />வெண்பாவும், கோபத்தை பற்றிய விளக்கமும் மிகவும் அருமை.meenakshinoreply@blogger.com